கடலை எண்ணெய் தீபம் - குடும்பத்தில் வறுமை வந்து சேரும். கடன்கள் அதிகமாகும்.
வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபமேற்றினால் செல்வம் பெருகும்.
நெய், விளக்கெண்ணெய், இழுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்து தீபமேற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.
இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்
விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்
மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்
நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்
ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.
கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும். கிரகங்களின் சோதனை விலகும்.
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடம், கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.
வடக்கு திசையில் தீபம் ஏற்றிட, திரண்ட செல்வம் ஏற்படும். திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.
தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.