உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு முதல் நாளில் உங்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள பதிவு
நாம் எதிர் பார்க்காத நேரத்தில் நமது வலைப்பூவை இழந்து விட்டால் ? ஐயோ, நினைக்கவே பயமாக உள்ளது. அனால் அப்படி நிகழ வாய்ப்பு உள்ளது, எப்படி? நமது வலைபூவும், ஜிமெயிலும் ஒரே அக்கௌண்டில் இருப்பவை. எதோ ஒரு காரணத்தால் நாம் ஜிமெயில் அக்கௌன்ட் இழந்ததால் நமது வலைபூவும் காலி. நாம் கஷ்டப்பட்டு எழுதியது எல்லாம் அம்போ!
இதை தவிர்க்க நாம் இன்னொரு author ஐ சேர்த்து கொள்ளலாம். (வலைப்பூவில் இவ்வாறாக 100 பேரை சேர்த்து கொள்ளலாம்). அநேகமாக நாம் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட Gmail அக்கௌன்ட் வைத்திருப்போம் (எல்லாம் இலவசம் தானே). ஆகையால் இரண்டாவது Gmailஐ புதிய Author ஆக சேர்த்து கொள்ளவேண்டும். இதன் மூலம் ஒன்றை இழந்தாலும் மற்றௌன்றை வைத்து நமது வலைப்பூவை தொடர்ந்து எழுதலாம்.அது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்களது வலைபூவிற்குள் செல்லவும் பின்பு Dashboard Ø Settings செல்லவும்
பின்னர் Settings Ø Permissions Ø செல்லவும்
பின்னர் Blog Authors என்பதில் ADD AUTHORS என்பதை கிளிக் செய்யவும்
தற்போது அந்த மின் அஞ்சலுக்கு ஓரு CONFORMATION மெயில் அனுப்பப்பட்டிருக்கும். உங்கள் மெயில் INBOXல் கீழ் கண்டவாரு ஒரு மெயில் வந்திருக்கும்
அதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்யம்போது உங்களது பெயர் கேட்கும். இந்த பெயரில் தான் பதிவுகள் வெளி வரும்
அவ்வளவு தான் இனி BLOG AUTHOR/ADMIN என்பதில் புதிய மின் அஞ்சலும் காட்டப்படும். இனி இந்த இரண்டு ஜீமெயில் அக்கொண்ட் மூலமும் பிளாக்கை கையாளலாம். இது ஒரு தற்காப்பு தான் ஏனெனில் இம்முறையில் வரையறுக்கப்பட்ட வசதிகள் தான் கிடைக்கும். நீங்கள் புதிய பதிவுகள் மற்றும் பழைய பதிவுகளை திருத்தம் செய்யலாம்.