திருக்குறள்

தேடல்

ஒரு குழந்தையின் 10 கட்டளைகள் — பெற்றோருக்காக

|

ஒரு வித்தியாசமான  “Ten commandments” 10 கட்டளைகள்.

ஒரு குழந்தையின் ஆதங்கத்தில் எழுந்த கட்டளைகள் இவை.பெற்றோர்களைச் சிந்திக்கவைக்கும் கட்டளைகள்.
 

என் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். மற்றவர்களின் யோசனைகள் எனக்குத் தேவையில்லை”  என்ற மனோபாவத்தை மாற்ற முயற்சிக்கும் கட்டளைகள். சிந்தியுங்கள் … மாற்றி யோசியுங்கள். முடிந்தால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

இதோகுழந்தையின் 10 கட்டளைகள்.


1.என் கைகள் சிறியவை. நான் படுக்கையை விரிக்கும்போதும், ஒரு படத்தை வரையும்போதும்,  ஒரு பந்தை வீசும்போதும் இவற்றை மிகச் சரியாக (perfection) செய்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.

என்னுடைய கால்கள் குட்டையானவை. தயவுசெய்து என்னுடன்  வரும்போது மெதுவாக நடந்து வாருங்கள்.

அப்படிச் செய்தால் உங்களுடன் நான் நடந்து வருவதற்கு உதவியாயிருக்கும்.

 

2.நீங்கள் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்த மாதிரி, என்னுடைய கண்கள் இன்னும் இந்த உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்கவில்லை.

தயவுசெய்து என்னை இந்த உலகத்தைப் பத்திரமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள அனுமதியுங்கள். தேவையில்லாத தடைகளை உண்டாக்காதீர்கள்.

 
3. உங்களுக்கு வீட்டு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும்.

நான் குழந்தையாக இருப்பது சிறிது காலம்தான்.
 
எனக்காக வேண்டிக் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி எனக்கு இந்த அதிசயமான உலகத்தைப் பற்றி சந்தோஷமாகவும் மனப்பூர்வமாகவும் விளக்குங்கள்.

 

4. என்னுடைய உணர்ச்சிகள் மிருதுவானவை. என்னுடைய தேவைகளை மதித்து நடந்துகொள்ளுங்கள். 

உங்களை யாராவது கேள்வி கேட்டு நச்சரித்தால்  உங்களுக்குப் பிடிக்காது.

அதேமாதிரி மற்றவர்களையும், குறிப்பாக என்னையும், நாள்பூரா நச்சரித்துத் தொந்தரவு செய்யாதீர்கள்.

 


5.  நான் கடவுள் கொடுத்த விசேஷமான பரிசு. கடவுள் கொடுத்த இந்தப் பொக்கிஷத்தைப் பத்திரமாக  பாதுகாத்து வாருங்கள்.

என்னைப் பொறுப்புள்ள குழந்தையாக வளருங்கள். நான் தவறு செய்தால் அதை அன்போடு திருத்தி எனக்கு நல்போதனைகளைச் சொல்லுங்கள்.

 

6.உங்களுடைய ஊக்கம் எனக்கு எப்பொழுதுமே தேவை. என்னுடைய தவறுகளைத் திருத்துங்கள்  என்னைத் திட்டாமல்.

 

7.என்னை பற்றி முடிவு எடுக்க எனக்குச் சுதந்திரம் கொடுங்கள். நான் தோல்வி அடைந்தால்அந்தத் தோல்வியே என்னுடைய வெற்றியின் முதல் படி என்று நினையுங்கள்.

 

8.என்னைக் குறைவாக எடைபோட்டு என் மீது அதிகாரம்  செலுத்தாதீர்கள். எனக்கு அது தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கும். தயவுசெய்து என் சகோதரர்சகோதரியோடு என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

 

9.எங்களைத் தனியாக விட்டு நீங்கள் பயணங்கள்  செய்வதைத் தவிர்க்காதீர்கள்.

குழந்தைகளுக்கு எப்படிப்  பெற்றோர்களிடமிருந்து விடுமுறை தேவையோ  அதே மாதிரிதான்

பெற்றோர்களுக்கும் குழந்தைகளிடமிருந்து விடுமுறை தேவை.

 


10.தவறாமல் கோவிலுக்கோசர்ச்சுக்கோ என்னைக்  கூட்டிக்கொண்டு செல்லுங்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ரொம்பவே ஆசை.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (11) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (8) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB