படித்ததில் பிடித்த கவிதை
தாயின் மடியில் தலை வைத்து
தந்தை மடியில் கால் வைத்து
தூங்கியது ஒரு வசந்த காலம்...
தந்தை மடியில் அமர்ந்து கொண்டு
தாய் தந்த உருண்டை சாப்பாடு வாங்கி
சாப்பிட்டது ஒரு வசந்த காலம்....
தாயுடனும் தந்தையுடனும் கை கோர்த்து
அடம்பிடித்து திருவிழாக்களில் சுற்றி
மகிழ்ந்ததொரு வசந்த காலம்....
அப்பா விசிற அம்மா தைலம் தேய்க்க
நோய்கள் மறந்து நிம்மதியாய்
தூங்கியது ஒரு வசந்த காலம்....
இன்று அந்த வசந்த காலமெல்லாம் இறந்த காலம் ஆயிற்றோ....
நல்ல வேலை... நல்ல சம்பளம் என்று
மகளை பிரித்து வெளிநாடு அனுப்பியது
ஒரு திருமணக் காலம்
நல்ல வருமானம்... பதவி உயர்வு என
உடன் இருந்தும் மகனை பிரித்து இடைவெளி தந்தது
ஒரு உத்தியோக காலம்...
மகன் எப்போது தூங்குகிறான் என்று கூட தெரியவில்லை....
இன்று இணையத்தளத்தில் தான்
மகளையும், மாப்பிள்ளையும்
பேரக் குழந்தையும் பார்க்க முடிகிறது...
மகனின் அலை பேசியில் இருந்த
நினைவூட்டி தான் நினைவூட்டுகிறது,,,,
அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போக வேணும் என்று...
அம்மாவுக்கு மாத்திரை வாங்க வேணும் என்று....
மகனோடு மனம் விட்டு பேசக் காத்திருந்த
அந்த அம்மாவும் அப்பாவும்....
மகன் எப்போது வந்தான் என்று கூட அறியாமல்
தூங்கி போயினர்...
மகனையும் மகளையும் வளர்த்ததை போலவே
பேரனையும் பேத்தியையும் வளர்த்துக் கொண்டு
மகனோடு கழிக்கும் அந்த வசந்த காலம் வரும்
எனக் காத்திருகின்றனர்.....
அந்த தாத்தாவும் பாட்டியும்.....
தாயின் மடியில் தலை வைத்து
தந்தை மடியில் கால் வைத்து
தூங்கியது ஒரு வசந்த காலம்...
தந்தை மடியில் அமர்ந்து கொண்டு
தாய் தந்த உருண்டை சாப்பாடு வாங்கி
சாப்பிட்டது ஒரு வசந்த காலம்....
தாயுடனும் தந்தையுடனும் கை கோர்த்து
அடம்பிடித்து திருவிழாக்களில் சுற்றி
மகிழ்ந்ததொரு வசந்த காலம்....
அப்பா விசிற அம்மா தைலம் தேய்க்க
நோய்கள் மறந்து நிம்மதியாய்
தூங்கியது ஒரு வசந்த காலம்....
இன்று அந்த வசந்த காலமெல்லாம் இறந்த காலம் ஆயிற்றோ....
நல்ல வேலை... நல்ல சம்பளம் என்று
மகளை பிரித்து வெளிநாடு அனுப்பியது
ஒரு திருமணக் காலம்
நல்ல வருமானம்... பதவி உயர்வு என
உடன் இருந்தும் மகனை பிரித்து இடைவெளி தந்தது
ஒரு உத்தியோக காலம்...
மகன் எப்போது தூங்குகிறான் என்று கூட தெரியவில்லை....
இன்று இணையத்தளத்தில் தான்
மகளையும், மாப்பிள்ளையும்
பேரக் குழந்தையும் பார்க்க முடிகிறது...
மகனின் அலை பேசியில் இருந்த
நினைவூட்டி தான் நினைவூட்டுகிறது,,,,
அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போக வேணும் என்று...
அம்மாவுக்கு மாத்திரை வாங்க வேணும் என்று....
மகனோடு மனம் விட்டு பேசக் காத்திருந்த
அந்த அம்மாவும் அப்பாவும்....
மகன் எப்போது வந்தான் என்று கூட அறியாமல்
தூங்கி போயினர்...
மகனையும் மகளையும் வளர்த்ததை போலவே
பேரனையும் பேத்தியையும் வளர்த்துக் கொண்டு
மகனோடு கழிக்கும் அந்த வசந்த காலம் வரும்
எனக் காத்திருகின்றனர்.....
அந்த தாத்தாவும் பாட்டியும்.....