பெரிய
நெல்லிக்காய் எனப்படும் துவர்ப்பு குணம் கொண்ட நெல்லிக்கனி
தான் நம் முன்னோர் நமக்காக
பரிந்துரைத்தது. முதலில் துவர்தாலும பின்
வாயில் ஒரு இனிப்பு சுவையை
நமக்கு அது தரும்.
நம்
நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஹீமோகுளோபின்,
பத்து மி.கி.,க்கும்
குறைவு. நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரே மாதத்தில், 3-4 மி.கி., வரை கூடுவது
கண் கூடாக கண்ட உண்மை.
சர்க்கரை
வியாதி உள்ள ஆண்கள் நெல்லிக்காய்
சாப்பிட்டால், "இல்வாழ்க்கை' மிகவும் சந்தோஷமாக இருக்கும்
இந்த
நெல்லிகாய் பொடியை முந்தின நாள் சிறிது
தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள்
தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது
நெல்லிக்காயை
கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு ஜூஸ் செய்து
(இரண்டு நெல்லிக்காய்) இருவர் சாப்பிடலாம். சர்க்கரை
வியாதி உள்ளவர் என்றால், இனிப்பு
சேர்க்காமல் சாப்பிடலாம் அல்லது நீராவியில் வேக
வைத்து, மிகவும் பொடியாக நறுக்கி,
நாட்டுச் சர்க்கரையில் சுக்கு, ஏலம் சேர்த்து
நன்கு கிளறி, சுருள் பதம்
வந்தவுடன் இறக்கி, பிரிட்ஜில் ஆறு
மாதம் வரை வைத்திருந்தாலும் கெட்டுப்
போகாது. தினமும் ஒன்று அல்லது
இரண்டு மேஜைக்கரண்டி அளவு வீட்டில் உள்ளவர்கள்
அனைவரும் சாப்பிடலாம்.
நெல்லிக்காய்
நிறைய கிடைக்கும் போது நெல்லிக்காயை சிறு
துண்டாக வெட்டி, வற்றல் போல்
செய்தும் வைத்து கொள்ளலாம். பின்
இதை தேனில் ஊற வைத்து
வெறும் வயரில் சாப்பிட எந்நாளும்
இளமையாய் தோற்றம் தரும்.
நெல்லிக்காயை
ஜாம், மோர், துவையல், ஊறுகாய்
, ரசம், குழம்பு என்று பலவாறு
சமைத்து உண்ணலாம்
சின்ன
நெல்லிக்காய் அதிக மருத்துவ குணம்
இல்லாதது. ஆனால் வைட்டமின் C நிறைய
உண்டு என்பதால் அதையும் ஊறுகாய் செய்து
அல்லது பச்சையாய் கூட சாப்பிடலாம்
ஆம்லா
பொடி என்று சில இடங்களில்
இதை பொடியாக விற்பார்கள். அந்த
பொடியை முந்தின நாள் ஊற
சிறிது தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள்
தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது. இந்த
பொடியை மோரில் கலந்தும் குடிக்கலாம்.
அமிர்தத்திற்கும் மேலானது நெல்லிக்கனி இதனை எப்படி பக்குவபடுதினாலும் இதன் மருத்துவ குணம் குறையாது என்பதே இதன் சிறப்பு. தமிழ் மருத்துவம் பெரிய நெல்லிக்காயை உபயோகிக்க சொல்லுகிறது.