திருக்குறள்

தேடல்

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

|

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - பழமொழி 

உண்மை என்ன?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களை பெறுவதைக் குறிப்பதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் 


1. ஆடம்பரமாய் வாழும் தாய்

2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை 

3. ஒழுக்கமற்ற மனைவி

4. ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன்பிறந்தோர் 

மற்றும் 

5. சொல் பேச்சு கேளாத பிடிவாதம் உடைய பிள்ளைகள் 

ஆகிய ஐந்தும் இருந்தாலே அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பது தான் உண்மையான பொருள்.

இவனுங்க தொல்ல தாங்க முடியல..

|


சீனாக்காரன் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ரயிலுக்காக காத்திருக்கான்
ஜப்பான் காரன் 7G க்கு upgrade ஆகி போறதுக்கு காத்திருக்கான்
ஆனா நம்மாளு - சாமி படத்தை ஷேர் பண்ணிட்டு எதாச்சு நல்லது நடக்கும் னு காத்திருக்கான்

அது பத்தாதுனு , இந்த படத்த 25 குரூப் ல ஷேர் பண்ணாட்டி - கெட்டது நடக்கும் னு வேற மிரட்டுறான்...

கல்லாமை - காமராஜர்

|

இன்று திரு. காமராஜர் அவர்களின் பிறந்த தினம். 15 ஜூலை 1903 ஆம் வருடம். இன்றைய நாளில் அவருடைய  காலத்தில் நடந்த நிகழ்வுகளில் இருந்து ஒன்றை பார்ப்போம்.
கல்லாமை (படித்ததில் பிடித்தது)
வெட்கப்பட வேண்டிய தற்போதைய பல அரசியல்வாதிகள்
காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் QUOTA ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிலிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம்.
காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம்.
ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம் கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம்.
தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா ? என்று பார்க்கலாம்...
அப்போது இவரது சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.
காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம்.
சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம்.
அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்ததாம்.
ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை.
நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தேடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே. பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.
சிரித்துக்கொண்டே காமராஜர் சொன்னாராம். நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன். அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் கைநாட்டு (கை ரேகை) இருந்ததோ, அவற்றைத்தான் நான் தேர்வு செய்தேன்.
எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத்தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) தமிழர் பண்பாடு (5) தமிழ் (16) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (11) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (60) படித்தேன்-இரசித்தேன் (1) பணம் (1) பரோட்டா (1) பழமொழி (2) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (30) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB