திருக்குறள்

தேடல்

ஆவணங்கள் தொலைந்தால்...2

|

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
 

இன்ஷூரன்ஸ் பாலிசி!


யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.  
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.  

பிறருக்கு கேடு நினைத்தால்

|


ஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.
ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று தோன்றியது.
 
ஒரு நாள், ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும்போது, "மகாராஜா... எனக்கு ஒரு குறை இருக்கிறது!' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், "என்ன அது?' என்று கேட்டார். "பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை!' என்றான்.
 
"அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார் ராஜா. "நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே!' என்றான்.
 
ராஜாவும், "... அப்படியா? சரி... நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்!' என்றார். எண்ணை தேய்ப்பவனுக்கோ சந்தோஷம். வேத வித்வானிடம் விஷயத்தைச் சொன்னார் ராஜா.
 
வித்வான் யோசித்தார். "சரி... இது அந்த எண்ணை தேய்ப்பவனின் வேலை தான்!' என்று யூகித்துக் கொண்டார். "அப்படியே ஆகட்டும் மகாராஜா... அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள்.
 
"பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரையில் யாருமே அங்கு வரக்கூடாது!' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான். இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, "அப்பாடா... தொலைந்தான்!' என்று சந்தோஷப்பட்டான்.
 
இந்த வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து தம் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு போய், ஒளிந்து கொண்டார். எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால். அவனுக்காக மாலையுடன் காத்திருந்தார் ராஜா.
 
எண்ணை தேய்ப்பவனும் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, "ஹூம்.. இனி வித்வானாவது, வருவதாவது!' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம்! குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வெளியே வந்தார் வித்வான். ராஜாவிடம் போய் வணக்கம் தெரிவித்தார்.
 
மாலை போட்டு மரியாதை செய்து, "பெரிய ராஜாவை பார்த்தீர்களா... எப்படி இருக்கிறார்? என்ன சொன்னார்?' என்று ஆவலோடு கேட்டார் ராஜா. வித்வானும், "அவர் நன்றாகவே இருக்கிறார்; ஆனால், எண்ணை மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணை தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம்... அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்!' என்றார்.
 
ராஜாவும் எண்ணை தேய்ப்பவரைக் கூப்பிட்டு, "நீ நாளைக்கே புறப்பட்டு போய் பெரிய ராஜாவுக்கு எண்ணை தேய்த்து விடு! உனக்காக சிதை தயாராக இருக்கும்!' என்று உத்தரவு போட்டார். எண்ணை தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படிச் சொன்னதாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டான்.
 
ராஜாவுக்கு கோபம் வந்தது. எண்ணை தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டார். தான் தெரியாத்தனமாக, அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினார்.
 
"பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்!' என்று இப்போது புரிகிறதா? எனவே, பிறருக்கு கேடு நினையாதீர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (7) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB