Welcome to Arivu's Collection

திருக்குறள்

தேடல்

நகைச்ச்சுவை

|


*டேய் மாப்ள*
*மரத்துமேல இருந்து பாத்தா*
*Engineering college பொண்ணுகளா தெரியிறாங்கடா..,,,..*
*கைய விட்டுட்டுப் பாரு மாப்ள medical college*
*பொண்ணுகளா தெரிவாங்க,,,,.,*
=====
ஒரு சிவில் பொறியாளர் பார்வையில்...
புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி.. கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது.. நல்லா 'செட்டாக' விட்டுட்டு அப்பறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒன்னும் ஆகாது..!
 
=====

“தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே… ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே…”
“சரி சரி… பல் வலி வராம பார்த்துக்கோ!”
====
ஒரு மாருதி 800 ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள்... 5 லட்சம்.. 10 லட்சம்... 20 லட்சம்.. 40 லச்சம் வரைஏலம் ஏறிக்கொண்டே போனது.. அப்போது அங்கெ வந்த ஒருவன் விசாரித்தான்.. "என்னையா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குபோயி இத்தனை விலை ஏறுதே..??.."
அங்கிருந்த ஒருவர் .. "..விஷயம் தெரியாம பேசாதேயா..!! இந்த மாருதி கார் இதுவரை 24 தடவ அக்சிடண்ட் ஆகிருக்கு... 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான்.. மனைவி மட்டுமே செத்துப் போயிருக்காங்க..." என்றார்..
உடனே நம்ம ஆளு கத்தினான்.... ".... ஒரு கோடி..."

அறிவிலி

|

அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?
உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரண பெயர் சொல்.
அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு, போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.
எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.

எனது சிறு சேமிப்பு...

|

வேறு ஒரு சமூக தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எனது பதில். அந்த அனுபவ பகிர்வு உங்களுடன்... 

சின்ன வயதில் உண்டியலில் பணம் சேர்த்து என்ன வாங்கினீர்கள்?

எனது முதல் உண்டியல் பழைய பழனி பஞ்சாமிர்த டப்பாதான்.

ஊரிலிருந்து வரும் உறவினர்கள் 5 பைசா, 10 பைசா, அதிகபட்சமாக 25 பைசா தருவார்கள். இதைத் தவிர கீழே இருந்து (கண்டெடுத்த) கிடைத்த காசுகளையும் உண்டியியலில் போட்டு வைத்தேன். அப்பொழுதல்லாம் 1 பைசா, 2 பைசா மற்றும் 3 பைசாக்கள் புழக்கத்தில் இருந்தன.

சில்லரையாக இருந்தால் செலவு செய்திடுவேன் என்று அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றிவிடுவேன். அந்த ரூபாய் நோட்டுகளையும் புத்தம் புது ரூபாய் நோட்டாக மாற்றி வைத்துக் கொள்வேன். (அப்பொழுது தான் செலவு செய்ய மனசுவராது)

எனது சிறு சேமிப்பை ஊக்கப் படுத்தியது எனது அம்மா மற்றும் எங்கள் வீட்டுக்கு பால் கொடுக்கும் வயதான பாட்டி.

இருவருமே அடிக்கடி என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு திரும்ப தரும்போது 10 அல்லது 20 பைசா அதிகமாக தருவார்கள் மற்றும் சரியான தருணத்தில் அவர்களுக்கு உதவியதற்காக நன்றி கூருவார்கள். இவை எனது சிறு சேமிப்பு பழக்க வழக்கங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது.

நான் எனது சேமிப்பில் இருந்து முதலில் வாங்கியது ஒரு ஹீரோ பேனா மற்றும் லிப்கோ டிக்ஷனரி (Hero Pen & Lifco Dictionary). இரண்டும் சேர்ந்து ₹55 ஆனது. இன்றும் அந்த டிக்க்ஷனரி என்னிடம் உள்ளது.

எனது சிறு சேமிப்பு பழக்கவழக்கத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் எனது பெற்றோர்தான் குறிப்பாக எனது அம்மா. அந்த காலங்களில் நினைத்தவுடன் வருடாந்திர சுற்றுலா அல்லது கோயில்களுக்கு செல்ல இயலாது ஆகையால் வருடம் தோறும் வருடத்தின் ஆரம்பத்தில் பணத்தை உண்டியலில் சிறிய சிறிய சேமிப்பார்கள். சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு பழனிக்கு அல்லது திருப்பதிக்கு சென்று வருவோம்.

திருப்பதிக்கு செல்வது என்றால் சனிக்கிழமைதோறும் உண்டியலில் பணம் போடுவோம் அதுவே பழனி என்றால் வெள்ளிக்கிழமைகளில்.. ஆக மொத்தத்தில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ திருப்பதியையோ அல்லது வேறு ஏதேனும் கோயில்களுக்கு சென்று வருவோம் பணம் சேர்வதை பொருத்து இலக்கு மாறுபடும். எனவே, வருடம் முழுவதும் உண்டியல் சாமி ரூமில் இருக்கும்.


சிறுவயதில் இருந்தே இதை பார்த்தும் மற்றும் அதனால் பயன்பெற்றும் இருந்ததால் எனது வாழ்க்கையில் சிறு சேமிப்பு என்பது ஒன்றாகி போனது. எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் முதலில் சேமிக்க தொடங்கி விடுவேன்.

மலரும் நினைவுகளை திரும்ப செய்த இந்த கேள்விக்கு மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (18) தெரிந்துகொள்வோம் (15) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (6) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (32) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB