முன்னாள் அதிபர் முஷாரப்,
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்,
இந்தி நடிகை மாதுரி தீட்சித்,
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோர் ஒரே ரயில் கம்பார்ட்மென்டில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஓடிக் கொண்டிருந்த ரயில், திடீரென ஒரு மலைக் குகையில் நுழைந்தது; பெட்டி முழுக்க கும்மிருட்டு! அப்போது, ஒரு கிஸ்சிங் - முத்தமிடும் சப்தமும், அதைத் தொடர்ந்து எவர் கன்னத்திலோ அடி விழும் ஓசையும் கேட்டது... அடுத்த சில நொடிகளில் மலை குகையை விட்டு வெளியே வந்தது ரயில். பெட்டியினுள் வெளிச்சம் பரவியது. தாட்சரும், மன்மோகனும் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல் அமர்ந்திருந்தனர். முஷாரப்போ, சிவந்த வலது கன்னத்துடன் இரு உள்ளங்கைகளாலும் கன்னத்தைப் பிடித்தபடி, கால்களில் கைகளை முட்டுக் கொடுத்து கொண்டிருந்தார்; எவருமே எதுவுமே பேசிக் கொள்ளவில்லை.
அப்போது தாட்சர் நினைத்தார்... "இந்த பாகிஸ்தானியர்கள் மாதுரி மீது ஏன் தான் இப்படி கிறுக்குப் பிடித்து அலைகின்றனரோ... மலைக் குகையில் ரயில் பெட்டி கும்மிருட்டான நேரத்தில் நுழைந்த போது, மாதுரிக்கு முத்தம் கொடுக்க முஷாரப் முயன்றிருப்பார்... அந்தப் பெண் சரியாக தான் கொடுத்திருக்கிறாள்...' என, அவரது எண்ண ஓட்டம் சென்றது.
மாதுரி இப்படி நினைத்துக் கொண்டார்... "எனக்கு கிஸ் கொடுக்க முஷாரப் முயன்று, இருளில் ஆள் தெரியாமல் தாட்சருக்கு முத்தம் கொடுத்து விட்டார் போலும்... தாட்சர் திரும்ப சரியாக கொடுத்து விட்டார்...' என்ற ரீதியில் சிந்தித்தார் மாதுரி.
"சே... என்ன பைத்தியக்காரத்தனம்... இந்த கிழம் (மன்மோகன்) மாதுரிக்கு முத்தம் கொடுக்க முயன்றிருக்கும்... நான் தான் அது என நினைத்து, எனக்கு அறை கொடுத்து விட்டாள் மாதுரி...' என்று நினைத்தார் முஷாரப்.
அடுத்து திட்டம் போட்டார் மன்மோகன்...
"அடுத்த மலைக்குகையில் ரயில் பெட்டி நுழைந்து இருந்தால்... மீண்டும் ஒரு முத்த சப்தம் எழுப்பி, இன்னொரு அடி முஷராப்க்கு கொடுத்து விடலாம்...'