திருக்குறள்

தேடல்

என்ன படிக்கனும்

|

சிரிக்க சிந்திக்க:

என் தம்பி: அண்ணே அடுத்தவாரம் +2 ரிசல்ட் வருது..
நானு: அதுக்கு என்னல தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு தெரியலணே,
மொதல்ல ஒன்னோட ஆசையச் சொல்லுடே..

அண்ணே டாக்டருக்கு படிக்கவா?
ஏலேய், டாக்டராகி சேவை செய்வேனு பேட்டி மட்டும் தான் கொடுக்கத்தெரியும், ஆனா செய்யமாட்டிங்க, வேற சொல்லு..

அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?
இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல நாலுபேரு கெடக்கானுவோடே..

அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே?,
ஏன்டா? ஏன்? நான் படுற பாடு போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட் ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு கெடைக்காதுடா..

அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?
ஏதுக்கு? உனக்கோ மேலே பார்த்தாலே பயம், பத்தாதற்கு அடிக்கடி நடு வானில் பிளேன காணலனு செய்தி வருது. அது சரியா இருக்காது...

அப்போ மரைன் ஓகேவா?
வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம், நீச்சல் வேற தெரியாது..

பேசாம ராணுவத்துக்கு போகட்டுமாணே?
அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..

போலீசு வேலைக்காவது ட்ரை 
பன்னவாணே?
லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள போலீசு கூட போன்ல "ஒன்னு குடுக்கட்டுமா?னு" கேப்ப, வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..

அப்போ ஏதாவது டிகிரியவாது முடிக்கவாணே?
சத்தியமா வேலை கிடைக்காதுல, தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு கோடி பேரு கெடக்கான்..

அண்ணே கேட்ரிங் ஓகேவா?

சமையல் செய்றதெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நீயே கத்துப்ப தம்பி, வேஸ்ட்ல..

டீ கடை வைக்கட்டுமாணே?
வேனாம் போயிடு, வாயில் ஏதாவது வந்துடும்.

LIC ஏஜெண்ட்டா ஆகட்டுமாணே?
ஏன்டா? எப்ப பார்த்தாலும் வாழ்வதற்கு வழி சொல்லாமல் சாவை பற்றியே பேச வேண்டுமா?

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ் பன்னட்டுமா?
ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது இல்ல தம்பி..

ஏதாவது யாவாரம் பன்ன கடைய 
ஆரமிக்கட்டுமா?
இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த இடத்தில யாவாரம் பண்ணி திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா மண்டக்கா" திட்டீருவேன்..

வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்கட்டுமாணே?
அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய் நாட்டப்பத்தி கூட சிந்திக்க மாட்டானுங்கல..

யண்ணே அப்போ நான் என்னதான் பன்ன?

அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத தூக்கு, போய் வயல கொத்து, நாலு வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி எங்களுக்கு கடவுள்.

ஏன்ணே இப்புடி சொல்ற?
ஆமால தம்பி, எல்லா படிப்ப படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா எல்லோரும் சாப்பிடுறதுக்கு விவசாயம் பன்ற ஆள் இல்லடே..

அப்புடி சொல்லாதணே நான் இருக்கேன்,
அப்புடி சொல்றா என் சிங்கக்குட்டி, தூக்குடா மம்புட்டிய, வாடா வயலுக்கு போவோம், உனக்கு நான் உதவி பன்றேன்டா..

விவசாயி_அழிந்தால் ? 
விவசாயம்_அழியும் ,
விவசாயம்_அழிந்தால் ? உலகமே_அழியும் .

சிரிப்போம் சிந்திப்போமுடன்
உங்க நண்பன்.

உலகப் புத்தக நாள்- 2024

|

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்! இன்று உலக புத்தக நாள் அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள். (ஏப்ரல் 23)

ஒரு மனிதனுக்கு புத்தம்தான் சிறந்த தோழன் என்ற கூற்று உள்ளது. புத்தகங்கள், அவற்றின் அனைத்து வடிவங்களிலும், கற்றுக்கொள்ளவும் நம்மை நாமே அறிந்து கொள்ளவும் அனுமதிக்கின்றன. அவை நம்மை மகிழ்விப்பதோடு, உலகத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாட யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது.

இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களான மாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாக உள்ளது.

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்கு சமம் போன்றது. நமக்கு தெரியாத அனைத்து விஷயங்களையும் ஒரு புத்தகத்தில் நாம் தெரிந்துக்கொள்ளலாம். கல்வி கற்பது ஒருநாளும் வீண்போவதில்லை. இந்தியா உள்ளிட்ட 100-ற்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

எனது சிறு வயது முதல் எனக்கு இருந்த ஆசைகளில் ஒன்று எனது சொந்த வீட்டில் ஒரு புத்தக அலமாரியை வைக்க வேண்டும் என்பதே அவ்வாறே எனக்கு வசதிகள் வந்த பின்பு கட்டிய வீட்டில் புத்தக அலமாரியை ஒன்றையும் அமைத்துக் கொண்டேன்.

இன்று முதல் படித்தேன்-இரசித்தேன் என்ற தலைப்புகளின் கீழ் நான் படித்து ரசித்த (வரலாற்று நூல்கள், சுயசரிதைகள், அரசியல் மற்றும் சமூக நூல்கள்) மேற்கோள்களையும் கருத்துக்களையும் உவமைகளையும் பழமொழிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன்.

படித்தேன்-இரசித்தேன்

1. "வாதம் பலவீனப்படும்போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான்".

2. “உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நடமாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதேபோல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப்பார்கிற எல்லோரையும் காவற்காரர்கள் என்று பயப்படுகிறார்கள்.

3. "ஒரு மொழியை அவசியத்துக்காக யார் வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் நயங்களையும், சமத்காரங்களையும் உண்டாக்கி அணி நலம்பட எழுதவோ பேசவோ அதை தாய் மொழியாகக் கொண்டவர்களால் தான் முடியும்"..

தமிழ் புத்தாண்டு- குரோதி

|

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய  குரோதி ஆண்டின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில்

மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி

நிறைந்ததாக அமைய

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இப்படிக்கு 

அறிவுமதி மற்றும் நிலாமகள் 

இந்த ஆண்டின் இந்த நேரத்தில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடும் பிராந்தியங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் இது. குறிப்பாக வரைபடத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு இடையே உள்ள புவியியல் இணைப்பு சுவாரஸ்யமானது.

இந்தியாவில் மட்டுமின்றி, Vaisakhi வைசாகி (பஞ்சாப்), Poyla Boishakh பொய்லா பொய்ஷாக் (வங்காளம்), தமிழ் புத்தாண்டு, Rongali Bihu ரோங்காலி பிஹு (அஸ்ஸாம்), Bishu பிஷு (ஒடிசா),Vishu விஷு (கேரளா), Jud Sheetal ஜூட் ஷீடல் (பீகார்) ஆகியவை புத்தாண்டாகக் கொண்டாடப்படுகின்றன. சூரிய நாட்காட்டி, ஆனால் பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மியான்மர், லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற பகுதிகளும் இந்த முறை புத்தாண்டைக் கொண்டாடுகின்றன.

985 மற்றும் 1014 க்கு இடையில் சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் முதலாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சியின் தடயங்கள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான வரலாற்று ஆதாரங்களை இது வழங்குகிறது.

வாழ்க்கை ஜாலியாயிரும்

|

கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு
மொட்டமாடி தூக்கம் ..
திருப்தியான ஏப்பம்...
கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...
நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..
7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..
பாட்டியிடம் பம்மும் தாத்தா ...
தாகம் தணித்த bore well pipe தண்ணி ..
பத்து ரூவா சில்லரை குடுங்கனு, கடைக்காரன் மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...
Notebookன் கடைசிப்பக்கம்...
கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup இல்லா
அழகி ...
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...
தூங்க தோள் கொடுத்த சக பயணி ....
எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..
பாய் வீட்டு பிரியாணி ..
பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..
இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..
இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...
கோபம் மறந்த அப்பா..
சட்டையை ஆட்டய போடும் தம்பி..
அக்கறை காட்டும் அண்ணன்..
அதட்டும் அக்கா ...
மாட்டி விடாத தங்கை ..
சமையல் பழகும் மனைவி ...
புடவைக்கு fleets எடுத்துவிடும் கணவன்..
இதுவரை பார்த்திராத பேப்பர் போடும் சிறுவன்..
Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...
வழிவிடும் ஆட்டோ காரர்...
High beam போடாத lorry driver...
ஊசி போடாத மருத்துவர்..
சில்லறை கேட்காத conductor..
சிரிக்கும் போலீஸ்...
முறைக்கும் காதலி..
உப்பு தொட்ட மாங்கா..
அரை மூடி தேங்கா..
12மணி குல்பி..
ATM ல் உள்ள a / c ..
Sunday சாலை ...
மரத்தடி அரட்டை...
தூங்க விடாத குறட்டை...
புது நோட் வாசம்..
மார்கழி மாசம்..
ஜன்னல் இருக்கை..
தும்மும் குழந்தை..
கோவில் தெப்பகுளம்..
Exhibition அப்பளம்..
முறைப்பெண்ணின் சீராட்டு ...
எதிரியின் பாராட்டு..
தோசைக்கல் சத்தம் ..
பிஞ்சு பாதம்..
இதை எழுதும் நான்..
படிக்கும் நீங்கள்..
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
வாழ்க்கைய வெறுக்க high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்
அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..
அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...
water packet அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....
கவலை காலியாயிரும் 
வாழ்க்கை ஜாலியாயிரும்!!!

சிட்டுக்குருவிகள் தினம்

|

உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல ; அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது ; உரிமையானது. அதனால்தான், "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும்" என்றார் இராமலிங்க அடிகளார்.

சேதி சொல்லும் சிட்டுக்குருவியை கொண்டாடும் தேதி இன்று! உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக் குருவிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் வாழ்பவருக்கும் இன்னும் அலாரமாக இருப்பது இதன் ஒளிதான். கீச் கீச் என்ற அந்த இசையை கேட்டு விழிக்கையில் இதமாகவும், புத்துணர்வுடனும் அந்த நாள் தொடங்கும். ஆனால் தற்போதைய சூழலில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. மேலும் இவை மனிதனுடன் ஒத்து வாழும் உயிரினமாகவே இருக்கிறது. இது மாடம்,பரண் மற்றும் ஓடுகளின் இடையில் கூடு கட்டி வாழும். இப்போது  அடிக்கடி கட்டடங்களின் உட்பகுதியிலும் வாழ்கிறது. குறிப்பாக தொழிற்சாலைகள், கிடங்குகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகள் ஆகிய இடங்களிலும் வாழ்கிறது.

காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை சிட்டுக்குருவி. பார்ப்பதற்கு அழகாக தென்படும் இந்த சிட்டுக்குருவியை காண்பித்து தாய் தன் பிள்ளைக்கு ஒரு காலத்தில் சோறு ஊட்டி வந்தாள். ஆனால், இந்தப் பறவையை இன்றைய குழந்தைகளுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 31 ஆண்டுகளாகும். இவை மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்ல பறவைகளாக கிளி, மைனா போல வளர்க்கவும் முடியாது. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களை கொண்டு கூடு கட்டி வசிக்கின்றன.

ஊர்க்குருவி,  சிட்டுக்குருவி, அடைக்கலாங்குருவி , தூக்கணங்குருவி , இராப்பாடிக்குருவி, வாற்கொண்டலாத்தி,கட்டுக்காடை ,பாற்குருவி, காட்டுள்ளான் , அக்காக்குருவி ,குயில் , கோகிலம் ,பஞ்சது ,பிகம் , வலாசகம் ,இசைக்குரற்கருவி  ,களகண்டம், கொண்டலாத்தி , பாட்டாணி ,புழுக்கொத்தி ,பெருங்கொடை ,சூறைக்குருவி இன்னும் பல வகைகள் உள்ளன.

நாம் பார்த்தும், ரசித்தும் மகிழ்ந்த ஒரு சிறு பறவையினம் நம்மிடம் இருந்து விடைபெற்று விடக்கூடாது. முட்டையிட்டு அடைகாத்து தன் இனத்தை பெருக்கி மனித இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதும், பாதுகாப்பதும் நமது பொறுப்பு. வீடுகளின் பால்கனியிலும் வீட்டின் சுற்றத்திலும் மரக்கன்றுகள் பூச்செடிகளும் வளர்த்து வந்தால் சிட்டுக்குருவி போன்ற பறவைகள் வந்து வசிக்கும் இருப்பிடமாக மாறும். இயன்ற அளவு நெல், திணை, ராகி போன்ற சிறு தானியங்களும், குடிக்க நீரும் சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் வைத்து வரலாம்.

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

|

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…


* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2024

|

 இனிய வாசகர்களுக்கு,

இந்த புத்தாண்டிலே!

தோல்விகள் நீங்கட்டும்

வெற்றிகள் குவியட்டும்

மகிழ்ச்சி பொங்கட்டும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்
 
இப்படிக்கு ஆசிரியர்கள்,

அறிவுமதி மற்றும் நிலாமகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (4) எச்சரிக்கை (3) எடக்கு-மடக்கு (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) குண்டக்க-மண்டக்க (1) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (3) செய்தி (12) தமிழர் பண்பாடு (5) தமிழ் (15) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (9) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (57) படித்தேன்-இரசித்தேன் (1) பணம் (1) பரோட்டா (1) பழமொழி (1) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (28) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB