Welcome to Arivu's Collection

காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்............Good Morning, Have a Nice Day.......

திருக்குறள்

தேடல்

Mar
16,
2025

எனது சிறு சேமிப்பு...

|

வேறு ஒரு சமூக தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எனது பதில். அந்த அனுபவ பகிர்வு உங்களுடன்... 

சின்ன வயதில் உண்டியலில் பணம் சேர்த்து என்ன வாங்கினீர்கள்?

எனது முதல் உண்டியல் பழைய பழனி பஞ்சாமிர்த டப்பாதான்.

ஊரிலிருந்து வரும் உறவினர்கள் 5 பைசா, 10 பைசா, அதிகபட்சமாக 25 பைசா தருவார்கள். இதைத் தவிர கீழே இருந்து (கண்டெடுத்த) கிடைத்த காசுகளையும் உண்டியியலில் போட்டு வைத்தேன். அப்பொழுதல்லாம் 1 பைசா, 2 பைசா மற்றும் 3 பைசாக்கள் புழக்கத்தில் இருந்தன.

சில்லரையாக இருந்தால் செலவு செய்திடுவேன் என்று அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றிவிடுவேன். அந்த ரூபாய் நோட்டுகளையும் புத்தம் புது ரூபாய் நோட்டாக மாற்றி வைத்துக் கொள்வேன். (அப்பொழுது தான் செலவு செய்ய மனசுவராது)

எனது சிறு சேமிப்பை ஊக்கப் படுத்தியது எனது அம்மா மற்றும் எங்கள் வீட்டுக்கு பால் கொடுக்கும் வயதான பாட்டி.

இருவருமே அடிக்கடி என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு திரும்ப தரும்போது 10 அல்லது 20 பைசா அதிகமாக தருவார்கள் மற்றும் சரியான தருணத்தில் அவர்களுக்கு உதவியதற்காக நன்றி கூருவார்கள். இவை எனது சிறு சேமிப்பு பழக்க வழக்கங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது.

நான் எனது சேமிப்பில் இருந்து முதலில் வாங்கியது ஒரு ஹீரோ பேனா மற்றும் லிப்கோ டிக்ஷனரி (Hero Pen & Lifco Dictionary). இரண்டும் சேர்ந்து ₹55 ஆனது. இன்றும் அந்த டிக்க்ஷனரி என்னிடம் உள்ளது.

எனது சிறு சேமிப்பு பழக்கவழக்கத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் எனது பெற்றோர்தான் குறிப்பாக எனது அம்மா. அந்த காலங்களில் நினைத்தவுடன் வருடாந்திர சுற்றுலா அல்லது கோயில்களுக்கு செல்ல இயலாது ஆகையால் வருடம் தோறும் வருடத்தின் ஆரம்பத்தில் பணத்தை உண்டியலில் சிறிய சிறிய சேமிப்பார்கள். சேர்த்த பணத்தை எடுத்துக்கொண்டு பழனிக்கு அல்லது திருப்பதிக்கு சென்று வருவோம்.

திருப்பதிக்கு செல்வது என்றால் சனிக்கிழமைதோறும் உண்டியலில் பணம் போடுவோம் அதுவே பழனி என்றால் வெள்ளிக்கிழமைகளில்.. ஆக மொத்தத்தில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ திருப்பதியையோ அல்லது வேறு ஏதேனும் கோயில்களுக்கு சென்று வருவோம் பணம் சேர்வதை பொருத்து இலக்கு மாறுபடும். எனவே, வருடம் முழுவதும் உண்டியல் சாமி ரூமில் இருக்கும்.


சிறுவயதில் இருந்தே இதை பார்த்தும் மற்றும் அதனால் பயன்பெற்றும் இருந்ததால் எனது வாழ்க்கையில் சிறு சேமிப்பு என்பது ஒன்றாகி போனது. எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் முதலில் சேமிக்க தொடங்கி விடுவேன்.

மலரும் நினைவுகளை திரும்ப செய்த இந்த கேள்விக்கு மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்.

Feb
28,
2025

மகாபாரத தத்துவம்

|

 மகாபாரதம் : இதைவிட சுருக்கமாக சொல்ல முடியுமா..?

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.

‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?

கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’

பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.

அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,

“உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவிஉடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.

“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண்.

“மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம். அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்…” அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

“அது என்ன தத்துவம் ஐயா? எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்…”

“நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்”


“பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்..

கௌரவர்கள் யார் தெரியுமா?”

“………………..”

“இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்..

“எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?

“………………..”

“முடியும்…! எப்போது தெரியுமா?”

வருண் மலங்க மலங்க விழித்தான்.

“கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.”

வருண் சற்று பெருமூச்சு விட்டான்.

பெரியவர் தொடர்ந்தார்.


“கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.”

வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.

“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”

“வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது. நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.

அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய். எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய். இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.

கீதையின் பாடமும் இது தான்.”

வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான். களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.

“அப்போது கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.

“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே. உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன். ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்குபோக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”

“நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?”

வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.

இப்போது தரையை பார்த்தான்.

அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான். அந்த காவிப்பெரியவரை காணவில்லை. அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.

Jan
2,
2025

புத்தாண்டு வாழ்த்துகள்

|

அன்பு வாசகர்களுக்கு,

இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், இன்பத்தையும் குறைவில்லா செல்வத்தையும் தரும் நல்ல ஆண்டாக மலர...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நண்பர்களிடமிருந்து கிடைத்த நல்ல வாழ்த்துகள்....



எனக்கு பிடித்த மற்றும் ரசித்த வாழ்த்து
என்றும் அன்புடன்,

அறிவுமதி, நிலாமகள், அறிவழகன்

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB