திருக்குறள்

தேடல்

படித்ததில் பிடித்த கவிதை

|

படித்ததில் பிடித்த கவிதை

தாயின் மடியில் தலை வைத்து
தந்தை மடியில் கால் வைத்து
தூங்கியது ஒரு வசந்த காலம்...

தந்தை மடியில் அமர்ந்து கொண்டு
தாய் தந்த உருண்டை சாப்பாடு வாங்கி
சாப்பிட்டது ஒரு வசந்த காலம்....

தாயுடனும் தந்தையுடனும் கை கோர்த்து
அடம்பிடித்து திருவிழாக்களில் சுற்றி
மகிழ்ந்ததொரு வசந்த காலம்....

அப்பா விசிற அம்மா தைலம் தேய்க்க
நோய்கள் மறந்து நிம்மதியாய்
தூங்கியது ஒரு வசந்த காலம்....

இன்று அந்த வசந்த காலமெல்லாம் இறந்த காலம் ஆயிற்றோ....

நல்ல வேலை... நல்ல சம்பளம் என்று
மகளை பிரித்து வெளிநாடு அனுப்பியது
ஒரு திருமணக் காலம்

நல்ல வருமானம்... பதவி உயர்வு என
உடன் இருந்தும் மகனை பிரித்து இடைவெளி தந்தது
ஒரு உத்தியோக காலம்...
மகன் எப்போது தூங்குகிறான் என்று கூட தெரியவில்லை....

இன்று இணையத்தளத்தில் தான்
மகளையும், மாப்பிள்ளையும்
பேரக் குழந்தையும் பார்க்க முடிகிறது...

மகனின் அலை பேசியில் இருந்த
நினைவூட்டி தான் நினைவூட்டுகிறது,,,,
அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போக வேணும் என்று...
அம்மாவுக்கு மாத்திரை வாங்க வேணும் என்று....

மகனோடு மனம் விட்டு பேசக் காத்திருந்த
அந்த அம்மாவும் அப்பாவும்....
மகன் எப்போது வந்தான் என்று கூட அறியாமல்
தூங்கி போயினர்...

மகனையும் மகளையும் வளர்த்ததை போலவே
பேரனையும் பேத்தியையும் வளர்த்துக் கொண்டு
மகனோடு கழிக்கும் அந்த வசந்த காலம் வரும்
எனக் காத்திருகின்றனர்.....
அந்த தாத்தாவும் பாட்டியும்.....

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (7) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB