திருக்குறள்
தேடல்
பட்டா....
Labels: செய்தி, தமிழ் அளவை, படித்ததில் பிடித்தது, வழி காட்டி | author: S. Arivazhagan
இன்று, மக்கள் பட்டா வாங்குவதற்கு படும் பாடும் இருக்கிறதே... அதை வாங்குவதற்குள் நாயாய், பேயாய் அலைய வேண்டியுள்ளது.
இந்த பட்டா எப்படி வந்தது தெரியுமா?
மன்னர் ஆட்சி காலத்தில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் மழைநீரை பயன்படுத்தினர் மக்கள். அதற்காக, வாய்க்கால்களை பராமரிக்க, மக்களிடம் தீர்வை (வரி) வசூலிக்கப்பட்டது.
மேலும், நஞ்சை, புஞ்சை நிலங்களில் பயிர் செய்வதற்கேற்ப, வரி வசூல் செய்யப்பட்டது. அதை பராமரிக்க, சிட்டா கொண்டு வரப்பட்டு, எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ, அதற்கேற்ப வரி வசூல் செய்யப்பட்டது.
பிற்காலத்தில், கிணறு, ஆழ்துளை கிணறு, இன்ஜின் மற்றும் மின் மோட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், எவ்வளவு நிலத்தில் பயிர் செய்யப்பட்டனவோ அதற்கு மட்டும் வரி வசூல் செய்வதற்கு பதில், பயிர் செய்யப்படாத நிலத்திற்கும், வரி வசூலித்தது அரசு.
அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும், அதே தவறையே செய்வதுடன், அதையே பட்டா என்ற பெயரில், மக்களை படாதபாடு படுத்துகின்றனர். இலவச மனை கொடுத்தால், அதற்கு பட்டா வாங்க வேண்டும் என்பது சரி. விலைகொடுத்து வாங்கிய நிலத்தை, அரசு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கு வரி கட்டப்பட்ட பின், மறுபடியும் பட்டா என்ற பெயரில், ஒரு விலை கொடுக்க வேண்டுமா?
ஒரு பொருள் விலைகொடுத்து வாங்கிய பின், அதன் ரசீது உடையவருக்கு, அந்தப் பொருள் சொந்தம். பின், அதற்கு எதற்கு பட்டா என்ற பெயரில், மற்றொரு விலை? மக்களுக்கு உரிய சேவை செய்ய, 'பட்டா மாற்றம்' என்பதை கட்டாயமாக்குவதை தவிர்க்க வேண்டும். இலவச மனை பெறுவோருக்கு மட்டும் பட்டா கொடுத்தால் போதும்!
என் முத்தழகி
Labels: கவிதை, படித்ததில் பிடித்தது, பொழுதுபோக்கு, வாழ்க்கை | author: S. Arivazhagan
இந்த கவிதை எழுதியவர் பெயர் தெரியாது, ஆனால் மிகவும் பிடித்தது. கவிதைக்காக படமா அல்லது படத்துக்காக கவிதையா, இரண்டும் அருமை.
என் முத்தழகி
பாவாடை நாடாக்கூட கட்டதெரியாத
உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க
கட்டுனது தாலியுனும்
நடந்தது கல்யாணம்னும்
பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்
அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ
அம்மன் சிலையாட்டம் நீ நின்ன
சிறுத்த இடையழகி !
செவத்த நிறத்தழகி !
கொஞ்சும் பேச்சழகி !
என் முத்தழகி !
பின்கொசுவம் சேலைகட்டி,
கோணங்கி கொண்டை போட்டு,
கொண்டையில பூவும் வச்சு..
கும்முன்னு நீ வந்தா
கம்முனு இருக்கவா முடுஞ்சுது.
கம்மாகரையிலும்,
களத்துமேட்டுலையும்...
காதலும் வளந்துச்சு
குடும்பமும் பெருகுச்சு
மூணு காணி நிலத்துல
முறைய பயிர் வச்சு
கருதருத்து கமிட்டில கொடுத்து காசாக்கி
கழனி வேலைய நா பாக்க.
கணக்குபுள்ளையா நீ இருந்த.
எட்டு புள்ள பெத்தும் எடுபாத்தான் இருக்க புள்ளன்னு...
நைய்யாண்டி நான் பேச
மூத்தவ மூலைல உட்கார்ந்தாச்சு
இன்னும் முந்தானை நினைப்ப பாருன்னு சொல்லி
கொமட்டுல குத்தி குறும்பா சிரிச்சத நினைக்கையில்
நெஞ்சம் நிறைஞ்சிருக்கு.
அஞ்சு பொண்ணும்,
முணு பிள்ளையும்
வளந்து நிக்க
காச கரியாக்காம கச்சிதமா குடும்பம் பண்ணியதால
கெளரவமா அடுத்தடுத்து
அஞ்சு பொண்ணையும் கரையேத்தினோம்.
மூணு மருமகளையும் முறையா கொண்டுவந்து
பொறுப்ப கொடுத்து விருப்ப ஓய்வெடுக்க.
எடுத்த முடிவு தப்புன்னு இப்பதான் புரியுது.
பெத்த பிள்ளைங்க பாரமா நெனைக்க
மூணு வேலை சோத்துக்கு
மூத்தவன் வீட்ல ஒருநேரம்
இளையவன் வீட்ல ஒருநேரம்
நடுலவன் வீட்ல ஒருநேரம்னு...
நாதியத்து நாயா அலைய வேண்டியிருக்கு
உழைச்ச உழைப்புக்கு
விதிச்ச விதி இதுதான் !
முத்தழகி.
இப்போ நினைப்பெல்லாம் ஒண்ணுதான்.
கடைசி நிமிஷம் உன் மடியில கண்ண மூடனும்.
மூச்சி நின்னதை முடிவு பண்ணி
உன் முந்தானையில என் முகத்தை தொடச்சி
முறையா அனுப்பிட்டு
அடுத்த நிமிஷம் நீயும் வந்துடு
அங்கேயும் சேர்ந்தே இருப்போம்.
சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்
நீ இல்லைனா சொகமேது.!
உன் கழுத்துல தாலிக்கட்ட சொன்னாங்க
கட்டுனது தாலியுனும்
நடந்தது கல்யாணம்னும்
பத்து வயசுல எனக்கு மட்டும் எப்படி தெரியும்
அரும்பு மீசைக்கு அர்த்தம் புருஞ்சப்போ
அம்மன் சிலையாட்டம் நீ நின்ன
சிறுத்த இடையழகி !
செவத்த நிறத்தழகி !
கொஞ்சும் பேச்சழகி !
என் முத்தழகி !
பின்கொசுவம் சேலைகட்டி,
கோணங்கி கொண்டை போட்டு,
கொண்டையில பூவும் வச்சு..
கும்முன்னு நீ வந்தா
கம்முனு இருக்கவா முடுஞ்சுது.
கம்மாகரையிலும்,
களத்துமேட்டுலையும்...
காதலும் வளந்துச்சு
குடும்பமும் பெருகுச்சு
மூணு காணி நிலத்துல
முறைய பயிர் வச்சு
கருதருத்து கமிட்டில கொடுத்து காசாக்கி
கழனி வேலைய நா பாக்க.
கணக்குபுள்ளையா நீ இருந்த.
எட்டு புள்ள பெத்தும் எடுபாத்தான் இருக்க புள்ளன்னு...
நைய்யாண்டி நான் பேச
மூத்தவ மூலைல உட்கார்ந்தாச்சு
இன்னும் முந்தானை நினைப்ப பாருன்னு சொல்லி
கொமட்டுல குத்தி குறும்பா சிரிச்சத நினைக்கையில்
நெஞ்சம் நிறைஞ்சிருக்கு.
அஞ்சு பொண்ணும்,
முணு பிள்ளையும்
வளந்து நிக்க
காச கரியாக்காம கச்சிதமா குடும்பம் பண்ணியதால
கெளரவமா அடுத்தடுத்து
அஞ்சு பொண்ணையும் கரையேத்தினோம்.
மூணு மருமகளையும் முறையா கொண்டுவந்து
பொறுப்ப கொடுத்து விருப்ப ஓய்வெடுக்க.
எடுத்த முடிவு தப்புன்னு இப்பதான் புரியுது.
பெத்த பிள்ளைங்க பாரமா நெனைக்க
மூணு வேலை சோத்துக்கு
மூத்தவன் வீட்ல ஒருநேரம்
இளையவன் வீட்ல ஒருநேரம்
நடுலவன் வீட்ல ஒருநேரம்னு...
நாதியத்து நாயா அலைய வேண்டியிருக்கு
உழைச்ச உழைப்புக்கு
விதிச்ச விதி இதுதான் !
முத்தழகி.
இப்போ நினைப்பெல்லாம் ஒண்ணுதான்.
கடைசி நிமிஷம் உன் மடியில கண்ண மூடனும்.
மூச்சி நின்னதை முடிவு பண்ணி
உன் முந்தானையில என் முகத்தை தொடச்சி
முறையா அனுப்பிட்டு
அடுத்த நிமிஷம் நீயும் வந்துடு
அங்கேயும் சேர்ந்தே இருப்போம்.
சொர்க்கமே ஆனாலும் சொக்கத்தங்கம்
நீ இல்லைனா சொகமேது.!
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
anicent tamil
(4)
Blog Tips
(2)
Computer
(4)
ILUSION
(1)
information
(1)
LPG சிலிண்டர்
(1)
safety
(2)
Short Cut Key
(2)
SMS
(1)
tamil
(14)
tamil friendship poem
(2)
tamil joke
(7)
tamil kathai
(5)
tamil story
(6)
tamil year
(1)
Welding Symbol
(1)
அபூர்வ தகவல்
(2)
ஆரோக்கியம்
(16)
ஆவணங்கள்
(7)
இதிகாசம்
(1)
இயற்கை
(4)
எச்சரிக்கை
(4)
எடக்கு-மடக்கு
(2)
எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள்
(1)
கணணி பராமரிப்பு
(1)
கதை
(21)
கம்ப்யூட்டர்வேலை
(1)
கலைஞர்
(1)
கவிதை
(11)
காமராஜர்
(1)
குண்டக்க-மண்டக்க
(2)
சாப்ட்வேர் மாப்பிள்ளை
(1)
சிந்தனை
(4)
செய்தி
(13)
செல்வம்
(1)
சேமிப்பு
(1)
தமிழர் பண்பாடு
(6)
தமிழ்
(18)
தமிழ் அளவை
(2)
தமிழ் அளவைகள்
(1)
தமிழ் ஆண்டுகள்
(2)
தமிழ் எண்கள்
(1)
தமிழ் எழுத்து
(2)
தமிழ் காலம்
(2)
தமிழ் பாட்டு
(2)
தமிழ் மருத்துவம்
(6)
தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்
(1)
தன்னம்பிக்கை
(2)
தீபம்
(1)
துணுக்கு
(18)
தெரிந்துகொள்வோம்
(15)
நகைச்சுவை
(33)
நகைச்ச்சுவை
(6)
நகைச்ச்சுவைகடிதம்
(1)
நட்பு
(3)
நட்பு கவிதை
(2)
படம்
(1)
படித்ததில் பிடித்தது
(63)
படித்தேன்-இரசித்தேன்
(2)
பணம்
(2)
பரோட்டா
(1)
பழமொழி
(3)
பழம்தமிழர்
(1)
பறவை
(1)
பாதுகாப்பு
(2)
பிரபலமானவர்களின்
(4)
பெண்பார்க்கும் படலம்
(2)
பெற்றோர்
(2)
பொங்கல்
(1)
பொழுதுபோக்கு
(32)
மகாபாரதம்
(1)
மகிழ்ச்சி
(3)
மாங்கல்யம்
(1)
மாய தோற்றம்
(1)
வரலாற்று நிகழ்வு
(2)
வலைப்பூ
(1)
வழி காட்டி
(9)
வழிகாட்டி
(30)
வாழ்கை
(14)
வாழ்க்கை
(9)
வாழ்த்துகள்
(15)
விவசாயம்
(2)
விவசாயி
(1)
வேலை
(3)