திருக்குறள்

தேடல்

கடவுள் நகைச்சுவை

|


´Õ ¿¡û ¸¼×û º¢Åý â§Ä¡¸ò¨¾ À¡÷¨Å£¼ ÅÕ¸¢È¡÷,
Åó¾Å÷ ¦¸¡ïºõ ÁÐ «Õó¾ ÓÊ× ¦ºö¸¢È¡÷.
¯¼§É ¾ÉÐ §¾¡üÈò¨¾ Á¡üȢ즸¡ñÎ ´Õ ÁÐ ¸¨¼ìÌ ¦ºø¸¢È¡÷.
º¢ÅÛìÌõ ÁÐ ¸¨¼ °Æ¢ÂÕìÌõ ¿¼ìÌõ ¯¨Ã¡¼ø
º¢Åý: ÌÊì¸ ±ýÉ þÕìÌôÀ¡?
ÁÐ ¸¨¼ °Æ¢Â÷: ±í¸Ç¢¼õ Å¢Š¸¢, Ãõ, §Å¡ð¸¡, ƒ¢ý,À£÷ ¯ûÇÐ
º¢Åý: ӾĢø Å¢Š¸¢ ÌÊì¸ ÓÊ× ¦ºöÐ 5 À¡ðÊø Å¡í¸¢ ÌÊò¾¡÷
5 À¡ðÊø Å¢Š¸¢ ÌÊò¾ À¢ýÒ Ãõ ÌÊì¸ ÓÊ× ¦ºö¸¢È¡÷
ÁÐ ¸¨¼ °Æ¢Â÷ Á¢¸×õ ¬îº¡¢ÂÁ¡¸ ¡ռ¡ þó¾ ¬û 5 À¡ðÊø Å¢Š¸¢ìÌ À¢ÈÌõ ¿¢¨Ä¡¸ ¯ûÇ¡÷ ±É À¡÷ò¾¡÷
º¢Åý 5 À¡ðÊø Å¢Š¸¢,5 À¡ðÊø Ãõ ÌÊò¾ À¢ýÒ À£÷ ÌÊì¸ ÓÊ× ¦ºö¸¢È¡÷
40 À¡ðÊø À£÷ ÌÊò¾ À¢ýÒ ÁÐ ¸¨¼ °Æ¢Â¡¢¼õ º¢Åý ƒ¢ý §¸ð¼¡÷
ÁÐ ¸¨¼ °Æ¢Â÷ Á¢¸×õ ÌÆõÀ¢ ÁÉÐìÌû ¡ռ¡ þó¾ ¸¢ÕìÌ À ±É ¿¢¨ÉòÐ
º¢ÅÉ¢¼õ ³Â¡ ¿£í¸û ¡÷ ±É §¸ð¼¡÷. ¿¡ý þРŨà 2 À¡ðÊø Å¢Š¸¢ ÌÊò¾Å÷¸¨Ç ¾¡ý À¡÷òÐû§Çý ¬É¡ø ¿£í¸û þРŨà 50 À¡ðÊø¸ÙìÌ §Áø ÌÊò¾ À¢ýÒõ ¿¢¨Ä¡¸ ¯ûÇ£÷¸§Ç ±É §¸ð¼¡÷
«¾üÌ º¢Åý, ÌÆó¾¡ö ¿¡ý ¾¡ý º£Å¦ÀÕÁ¡ý ±ýÈ¡÷
«¨¾ §¸ð¼ ÁÐ ¸¨¼ °Æ¢Â÷ " þ§¾¡¼¡ í¦¸¡öÂ¡Ç þô§À¡ ¾¡ý ÁôÒ ²È¢ÕìÌ"

தன்னம்பிக்கை சிறு கதை-1

|

வெகு காலத்திற்கு முன்பு…சிறிய தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை அடைய வேண்டும் என்பது தான் பந்தயத்தின் இலக்கு.

இந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்காகவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அந்த பெரிய கோபுரத்தைச் சுற்றி மிகப்பெரும் கூட்டம் கூடி விட்டது.

போட்டி ஆரம்பமாகி விட்டது. உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவருக்குக் கூட அந்த சிறிய தவளைகளால் கோபுரத்தின் உச்சியை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.
கூட்டத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்…..

“வழி மிகவும் கடினமானது”

“இந்தச் சிறிய தவளைகளால் நிச்சயமாக உச்சியை அடைய முடியாது”

“வெற்றிபெற ஒரு சிறிய வாய்ப்பு கூட அவற்றுக்குக்கிடையாது”

“கோபுரத்தின் உயரம் மிகவும் அதிகம்”

பார்வையாளர்களின் இத்தகைய பேச்சைக்கேட்ட அந்த சிறிய தவளைகள் ஒன்றன்பின் ஒன்றாக கோபுரத்தின் மேலே ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தன. ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்கியது. தொடர்ந்து உற்சாகத்துடன் இருந்த ஒரு சில தவளைகள் மட்டும் மேலும் அதிக உயரத்திற்கு ஏறிக் கொண்டிருந்தன.

கூடியிருந்த கூட்டம் தொடர்ந்து கூக்குரலிட்டது.

“இது மிகவும் கடினமான விஷயம்”

“உங்களில் ஒருவரும் உச்சியை அடையப்போவதில்லை”

உற்சாகமாக இருந்த அந்த சிறிய தவளைகளில், சில மிகவும் சோர்வடைந்து தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டு கீழ் நோக்கி இறங்கத் தொடங்கின.

ஒரே ஒரு தவளையைத் தவிர அனைத்து தவளைகளும் தங்கள் முயற்சியை கைவிட்டு விட்டன. அது மட்டும் தொடர்ந்து மேலே மேலே ஏறிக்கொண்டே இருந்தது. அது தன் முயற்சியில் சற்றும் மனம் தளரவில்லை. அது மிகுந்த பிரயத்தனத்துடன் கோபுரத்தின் உச்சியை சென்றடைந்தது. 

மற்ற அனைத்துத் தவளைகளும் அந்த ஒரு தவளையால் மட்டும் எப்படி கோபுரத்தின் உச்சியை அடைய முடிந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருந்தன.

போட்டியில் கலந்து கொண்ட தவளைகளில் ஒன்று, வென்ற தவளையிடம் “உனக்கு மட்டும் கோபுரத்தின் உச்சியை அடைவதற்கு உண்டான பலம் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டது.

வெற்றி பெற்ற தவளையிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

பிறகு தான் தெரிந்தது, வெற்றி பெற்ற அந்தத் தவளைக்கு காது கேட்காது என்பது.

க‌ண‌னியை எ‌வ்வாறு பராம‌ரி‌ப்பது?

|

எ‌ந்த‌ப் பொருளாக இரு‌ந்தாலு‌ம் முறையாக‌ப் பராம‌ரி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம். அதுபோல‌த்தா‌ன் க‌ணி‌னியு‌ம்.எவ்வளவு கூடுதல் கான்பிகேரேஷனில் கம்ப்யூட்டர் வங்கினாலும், அதை சரியாக பராமரிக்காவிட்டால், அத‌ன் செய‌ல்பாடு குறை‌ந்து‌விடு‌ம்.எனவே ஒரு க‌ணி‌னியை ‌சிற‌ப்பான முறை‌யி‌ல் பராம‌ரி‌ப்பது எ‌வ்வாறு எ‌ன்று பா‌ர்‌ப்போ‌ம்.

1.தினமும் ரிசைக்கிள் பின்னை காலி செய்ய வேண்டும்.

2.எ‌ப்போது‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்க ‌விடாம‌ல், ‌சில நேர‌ங்க‌ளி‌லாவது ஆ‌ப் செ‌ய்து க‌ணி‌னி‌க்கு ஓ‌ய்வு கொடு‌ங்க‌ள்.

3.கம்ப்யூட்டரில் உள்ள, நீண்ட காலம் நாம் பயன்படுத்தாத புரோக்கிராம் மற்றும் சாப்ட்வேர்களை நீக்கிவிடவேண்டும்.

4.தேவைய‌ற்ற, பய‌ன்பா‌ட்டி‌ல் இ‌ல்லாத பை‌ல்களையு‌ம் ‌நீ‌க்‌கி‌விடு‌ங்க‌ள். அதனை ‌ரீ சை‌க்‌கி‌ள் ‌பி‌ன்‌னி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்கு‌ங்க‌ள்.

5.டெம்பரவரி இண்டர்நெட் பைல்களை அழித்து விடுங்கள்.

6.அவ்வப்போது டிஸ்க் கிளீன் அப் செய்யுங்கள்.

7.குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது டிஸ்க் டிபிராக்மெண்டேஷன் செய்யுங்கள். அல்லது எப்போதெல்லாம் அதிக வேலை கொடுக்கிறீர்களோ, அதற்கு பிறகு டிஸ்க் டிபிராக்மெண்ட் செய்வது நல்லது.

8.குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏரர் செக்கிங் யுடிலிட்டி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை ஹார்டு டிஸ்கை கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போதும், சில வேண்டாத செக்டார்கள் உருவாகும். அவற்றை நீக்க, கம்ப்யூட்டரில் உள்ள எரர் செக்கிங் யுடிலிட்டி ஸ்கேனை பயன்படுத்த வேண்டும்.

9.தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

10.ஸ்பைவேர் எனப்படும் ரகசியங்களை திருடும் சாப்ட்வேர்களில் இருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்து கொள்ளவேண்டும். இதற்கான சாப்ட்வேர் தொகுப்புக்கள், விண்டோஸ் உடன் கிடைக்கின்றன.

11.தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனை இயக்கி, கம்ப்யூட்டர் போல்டர்கள், டிரைவ்களில் உள்ள வைரஸ்களை நீக்க வேண்டும்.

12.ஒவ்வொரு முறை டவுன்லோடு செய்யும்போதும், வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டும்.

13.யு.எஸ்.பி., ஸ்பீக்கர் போன்றவற்றை கம்ப்யூட்டருடன் இணைக்கும் போர்டுகளை கவனமாக சொருக வேண்டும். போர்டு உடைந்துவிட்டால், சரி செய்ய செலவு அதிகம் பிடிக்கும்.

15.முறைப்படியே, கம்ப்யூட்டரை ஷட்- டவுன் செய்ய வேண்டும். ஆன்/ஆப் சுவிட்சை பயன்படுத்தவேண்டாம்.

16.கம்ப்யூட்டர் அதிக சூடு ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; கம்ப்யூட்டருக்கு, ஓய்வு கொடுங்கள்.

17.யு.எஸ்.பி. மூலமே கம்ப்யூட்டரை இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கம்ப்யூட்டர் திடீரென க்ராஷ் ஆவதில் இருந்து தப்பிக்கும்.

18.ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சி.பி.யு மற்றும் மானிட்டரை திறந்து அதில் சேர்ந்திருக்கும் மெல்லிய தூசுக்களை அப்புறப்படுத்துங்கள்.

19.எ‌ப்போது‌ம் கு‌ளி‌ர்‌ந்த அறை‌யி‌ல் க‌ணி‌னி இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். அ‌ல்லது குறை‌ந்தப‌ட்ச‌ம் ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமான இட‌த்‌திலாவது இரு‌க்க வே‌ண்டு‌ம்.

கணினி சிஸ்ட கவசம்

|

எனக்கு வந்த நகைச்சுவையான email...

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க

பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க

சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க

எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்

நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட

பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்

மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க

கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்

மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க

டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.

அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக

கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.

சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.

மேற்படிப்பு

|

நீங்கள் மேற்படிப்பு படிக்க கீழ்கண்ட படம் உபயோகமாக இருக்கும்

படித்ததில் பிடித்த கவிதை

|

படித்ததில் பிடித்த கவிதை

தாயின் மடியில் தலை வைத்து
தந்தை மடியில் கால் வைத்து
தூங்கியது ஒரு வசந்த காலம்...

தந்தை மடியில் அமர்ந்து கொண்டு
தாய் தந்த உருண்டை சாப்பாடு வாங்கி
சாப்பிட்டது ஒரு வசந்த காலம்....

தாயுடனும் தந்தையுடனும் கை கோர்த்து
அடம்பிடித்து திருவிழாக்களில் சுற்றி
மகிழ்ந்ததொரு வசந்த காலம்....

அப்பா விசிற அம்மா தைலம் தேய்க்க
நோய்கள் மறந்து நிம்மதியாய்
தூங்கியது ஒரு வசந்த காலம்....

இன்று அந்த வசந்த காலமெல்லாம் இறந்த காலம் ஆயிற்றோ....

நல்ல வேலை... நல்ல சம்பளம் என்று
மகளை பிரித்து வெளிநாடு அனுப்பியது
ஒரு திருமணக் காலம்

நல்ல வருமானம்... பதவி உயர்வு என
உடன் இருந்தும் மகனை பிரித்து இடைவெளி தந்தது
ஒரு உத்தியோக காலம்...
மகன் எப்போது தூங்குகிறான் என்று கூட தெரியவில்லை....

இன்று இணையத்தளத்தில் தான்
மகளையும், மாப்பிள்ளையும்
பேரக் குழந்தையும் பார்க்க முடிகிறது...

மகனின் அலை பேசியில் இருந்த
நினைவூட்டி தான் நினைவூட்டுகிறது,,,,
அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போக வேணும் என்று...
அம்மாவுக்கு மாத்திரை வாங்க வேணும் என்று....

மகனோடு மனம் விட்டு பேசக் காத்திருந்த
அந்த அம்மாவும் அப்பாவும்....
மகன் எப்போது வந்தான் என்று கூட அறியாமல்
தூங்கி போயினர்...

மகனையும் மகளையும் வளர்த்ததை போலவே
பேரனையும் பேத்தியையும் வளர்த்துக் கொண்டு
மகனோடு கழிக்கும் அந்த வசந்த காலம் வரும்
எனக் காத்திருகின்றனர்.....
அந்த தாத்தாவும் பாட்டியும்.....

தமிழ் எழுத்துருக்களின் பயணம்

|

கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.














ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்
நீட்டலளவு
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

நேர்முக தேர்வில் உண்மையைச் சொல்ல முடிந்தால்....

|

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..(இவங்களுக்கு இந்த்த கேள்வியை உட்டா வேற எந்த கேள்வியும் தெரியாதா.. ) எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

மொவனே, உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்களின் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

உங்களின் மிகப்பெரிய பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்.., பணம்!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

எல்லாம் அந்த கடவுள் புண்ணியம் தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

(ம் சாமிக்கு வேண்டிகிட்டேன் ) நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

இப்படியல்லாம் பதில் சொல்ல ஆசைதான் ஆனால் வேலை கிடைக்காதே.

சாப்ட்வேர் மாப்பிள்ளை

|

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.
வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.
நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.
வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?
நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.
நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம "அறிவாளி" படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு "நீ ரொம்ப நல்லவனு" சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்...

கவுண்டமணி & விஜய் பேட்டி

|

இது நான் சில வருடங்களுக்கு முன் படித்தது
முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)
க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின்

|

நான் மிகவும் ரசித்த மின் அஞ்சல், மிக அருமையான வார்த்தை கோர்வை

(தி.மு) திருமணத்திற்கு முன் :
(நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள்

அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்

அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் :நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் :அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் :என்னை திட்டுவாயா ?

அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின் :

கீழிருந்து மேலே படியுங்கள்

சவப்பெட்டி ஜோக்

|

ஒரு பெண்மனியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.. எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது. உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், பெண்மனி உயிருடன் இருப்பது தெரிந்தது.

பிறகு அப்பெண்மனி 10 வருடங்கள் உயிருடன் இருந்தாள்.. பின்னர் அவள் இறந்து ஈமச் சடங்குகள் நடந்து மறுபடியும் சவப்பெட்டி வெளிக் கொணரப்படும் போது கணவன் அலறினான்..

"இந்தத் தடவையாவது இடிக்காமக் கொண்டு போங்கடா தெண்டக்காரப் பசங்களா..! "

மகிழ்ச்சி

|




உங்களுக்கு ஒரு மணி நேரம் மகிழ்ச்சி தேவை எனில் ஒரு சிறு துயில்/ உறக்கம் கொள்ளலாம்



 



உங்களுக்கு ஒரு நாள் மகிழ்ச்சி தேவை எனில் ஒரு நாள் திறந்தவெளியல் உணவு உண்ணக்கூடிய இன்ப பயணம் மேற்கொள்ளலாம்



  



உங்களுக்கு ஒரு வாரம் மகிழ்ச்சி தேவை எனில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்று வரலாம்








உங்களுக்கு ஒரு மாதம் மகிழ்ச்சி தேவை எனில் திருமணம் செய்து கொள்ளலாம்








உங்கள்ளுக்கு ஒரு வருடம் மகிழ்ச்சி தேவை எனில், உங்களது பரம்பரை சொத்தை உட்கார்ந்து செலவழிக்கலாம்











 ஆனால்,உங்கள்ளுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சி தேவை எனில், நீங்கள் செய்யும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள் / செய்ய கற்றுக்கொள்ளுங்கள்





வாழ்க வளமுடன்

தமிழ் புத்தாண்டு

|

இந்த விக்ருதி ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாம் பயன் படுத்தும் இந்த தமிழ் ஆண்டுக்குறிப்பேடு (calendar ) மொத்தம் 60 ஆண்டு சுழற்சிகளை கொண்டது . இந்த தமிழ் வருடத்தின் பெயர் விக்ருதி. தற்பொழுது நடக்கும் 60ஆண்டு சுழற்சி 1987 ஆம் ஆண்டு துவங்கியது.

தமிழ் வருடத்தின் பெயர் மற்றும் அதற்குறிய ஆங்கில வருடத்தை அடைப்பு குறிக்குள் கொடுத்துள்ளேன்.
01. பிரபவ (1987 - 1988)
02. விபவ (1988 - 1989)
03. சுக்ல (1989 - 1990)
04. பிரமோதூத (1990 - 1991)
05. பிரசோற்பத்தி (1991 - 1992)
06. ஆங்கீரச (1992 - 1993)
07. ஸ்ரீமுக (1993 - 1994)
08. பவ (1994 - 1995)
09. யுவ (1995 - 1996)
10. தாது (1996 - 1997)
11. ஈஸ்வர (1997 - 1998)
12. வெகுதானிய (1998 - 1999)
13. பிரமாதி (1999 - 2000)
14. விக்கிரம (2000 - 2001)
15. விஷு (2001 - 2002)
16. சித்திரபானு (2002 - 2003)
17. சுபானு (2003 - 2004)
18. தாரண (2004 - 2005)
19. பார்த்திப (2005 - 2006)
20. விய (2006 - 2007)
21. சர்வசித்து (2007 - 2008)
22. சர்வதாரி (2008 - 2009)
23. விரோதி (2009 - 2010)
24. விக்ருதி (2010 - 2011)
25. கர (2011 - 2012)
26. நந்தன (2012 - 2013)
27. விஜய (2013 - 2014)
28. ஜய (2014 - 2015)
29. மன்மத (2015 - 2016)
30. துன்முகி (2016 - 2017)
31. ஹேவிளம்பி (2017 - 2018)
32. விளம்பி (2018 - 2019)
33. விகாரி (2019 - 2020)
34. சார்வரி (2020 - 2021)
35. பிலவ (2021 - 2022)
36. சுபகிருது (2022 - 2023)
37. சோபகிருது (2023 - 2024)
38. குரோதி (2024 - 2025)
39. விசுவாசுவ (2025 - 2026)
40. பரபாவ (2026 - 2027)
41. பிலவங்க (2027 - 2028)
42. கீலக (2028 - 2029)
43. சௌமிய (2029 - 2030)
44. சாதாரண (2030 - 2031)
45. விரோதகிருது (2031 - 2032)
46. பரிதாபி (2032 - 2033)
47. பிரமாதீச (2033 - 2034)
48. ஆனந்த (2034 - 2035)
49. ராட்சச (2035 - 2036)
50. நள (2036 - 2037)
51. பிங்கள (2037 - 2038)
52. காளயுக்தி (2038 - 2039)
53. சித்தார்த்தி (2039 - 2040)
54. ரௌத்திரி (2040 - 2041)
55. துன்மதி (2041 - 2042)
56. துந்துபி (2042 - 2043)
57. ருத்ரோத்காரி (2043 - 2044)
58. ரக்தாட்சி (2044 - 2045)
59. குரோதன (2045 - 2046)
60. அட்சய (2046 - 2047)

உங்கள் வாழ்வின் முக்கியமான வருடத்தின் தமிழ் வருட பெயரை தெரிந்து கொள்ளுங்கள்.படித்து, அறிந்து மகிழவும்.



நன்றி: விக்கிபீடியா

SMS

|

நாம் எப்பொழுதாவது மன கஷ்டத்துடன் இருக்கும் பொழுது அதை மாற்ற நமக்கு பிடித்ததை செய்து மனம் மாற்றி கொள்ளலாம். அவ்வாற்று எனக்கு பிடித்த ஒரு சில எஸ் எம் எஸ் கீழே

1). 2011ல் ஒரு சட்டம் போடபோறங்கோ: யாரவது அழகா இருந்தா வரி கட்டனும். கடவுள் புண்ணியத்தில் நீங்க தப்பிச்சிட்டீங்க, நான்தான் மாட்டிக்கிட்டேன்

2) பரிட்சையில், கேள்வி தாள் ரொம்ப கடினமாக இருக்கா? கவலை படாதீங்க. கை வசம் ஒரு அருமையான ஐடியா இருக்கு. கண்ணை மூடி மூச்சை இழுத்துவிட்டு சத்தமா சொல்லுங்க " மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு"

வேலை, வேலை, வேலை

|

முன்பு ஒரு காலத்தில், ஒரு ராஜா தன்னிடம் வேலை செய்யும் குதிரை வீரனிடம் நீ எவ்வளவு தூரம் குதிரயில் செல்கிறாயோ அவ்வளவு இடத்தையும் / தூரத்தையும் அவனுக்கு தருவதாக கூறினார்

அதை கேட்ட குதுரை வீரன் உடனே குதுரையின் மீது ஏறி அமர்ந்து வேகமாக புறப்பட்டான் . அவனால் எவ்வளவு தூரம் போக முடிமோ அவ்வளவு தூரம் போனான்,
தொடர்ந்து போய் கொண்டே இருந்தான். அவனுக்கு ஆசை விடவில்லை, குதிரைக்கும் ஓய்வு கொடுக்காமல் அவனும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து போய் கொண்டு இருந்தான். ஒரு வழியாக நிறைய தூரம் கடந்த பின்பு போதும் என்று நினைத்து நின்றான்.

தற்பொழுது அவனும் குதிரையும் மிகவும் கலைத்து போய் சாகும் தருவாயில் இருந்தனர் .

இப்போ அவன் தனக்கு தானே கேட்டுக்கொண்டான், நான் ஏன் இவ்வளவு நிலத்தை ஓடி ஓடி கஷ்டப்பட்டு பிடித்தேன்?
தற்பொழுது நானோ இறக்கும் தருவாயில் உள்ளேன். எனக்கு தேவையோ இந்த உடலை அடக்கம் செய்ய சிறிய இடம் தான்.


இந்த கதை போலதாங்க நம்முடைய வாழ்கையும்

ஒவ்வொரு நாளும் பணத்திற்காகவும், வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மற்றும் அங்கிகாரதிர்காகவும்





நாம் நமது உடல், மற்றும் குடும்பத்துடன் செலவு செய்யும் நேரம் மற்றும் நமக்கு பிடித்தவற்றிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை




ஒருநாள் நாம் நம் வாழ்கயை திரும்பி பார்க்கையில் நமக்கு, இவ்வளவுஅதிகம் தேவை இல்லை என புரியம்.

ஆனால் நமக்கு நாம் இழந்த நமது உடல் ஆரோக்கியம் , நமது குடும்பத்தாரின் நெருக்கம் எதையும் திரும்ப பெற இயலாது.

ஆகவே நன்றாக புரிந்துகொள்ளுங்கள், வாழ்கை என்பது அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதிப்பது, வேலை செய்யும் இடத்தில் அதிகாரம் மற்றும் அங்கீகாரமோ அல்லது எப்பொழுதும் வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது அல்ல.


பணம் சம்பாதிப்பது , வேலை செய்வது எல்லாம் நம் வாழ்க்யை சந்தோஷமாக குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கே.

வாழ்க வளமுடன்

வாழ்க்கைப் பாடம்

|

நண்பர்களே.. இது இணையத்தில் இருந்து எடுத்தது தான் …

ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், மின்னஞ்சல்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

நட்பு கவிதை

|

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா,
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல...

நிழல் கூட மாலை
நேரத்தில் பிரியும்
என் நினைவுகள்
உன்னை விட்டு என்றும் பிரியாது..

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல
என் உயிர் நட்பாக..

புரியாத நட்புக்கு
அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை..

நம் வெற்றியின் போது
கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது
கை கொடுக்கும் நண்பனின்
ஒரு விரலே சிறந்தது..

கலைஞர் நகைச்சுவை

|

பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே

கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..

"இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?

" எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்..நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை..பாண்டிச்சேரியில் நிற்கப்போகிறேன்..!"

உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..

" பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!"

நட்புக்கு கூட கற்புகள் உண்டு

|

நண்பர்களே.. இது இணையத்தில் இருந்து எடுத்தது தான் …இருப்பினும்…படிக்கும் பொழுது இதயம் பழைய நினைவுகளில் துள்ளி ஓடுவதை மறுப்பதற்கு இல்லை.

ஒன்பது மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கிளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான்
எட்டு நாற்பது ஆகுற வரைக்கும்…
அடிச்சி புடிச்சி கிளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்ட்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் வாசல் நெருங்குறப்போ
‘வெறுப்படிக்கிதுடா மச்சான்’னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல தியேட்டர்ல படம் பாக்க!
‘கஷ்டப்பட்டு’ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்…
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்…
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு
வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் – தவிக்க விட்டதில்ல…
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல…
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘வெட்டி ஆபிஸர்’னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
‘சாப்பாட்ல காரம்டா மச்சான்’னு
சமாளிச்சி எழுந்து போவோம்…
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான்
இ-மெயிலும் வருகுது
“Hi da machan… how are you?” வுன்னு…
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
‘இன்னிக்காவது பேச மாட்டாளா?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . . .



எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி போன் இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
‘ஏண்டா பேசல?’ ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘மாமா’ ‘மச்சான்’ மாறாது!

கொடுங்கள்.. பெறுவீர்கள்!....

|

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
இன்றையப் பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !

LPG சிலிண்டர் காலாவதி தேதி

|

உங்கள் அனைவருக்கும் எனது தேசிய பாதுகாப்பு தின நல்வாழ்த்துகள் (4th MARCH 2010)

நீங்கள் LPG Cylinder முடிவு தேதி/ காலாவதி தேதி பற்றி (Expiry Date) கேள்விபட்டது உண்டா?

முடிவு தேதி முடிந்த பின்பு உள்ள gas cylinderஐ பயன் படுத்துவது பாதுகாப்பு இல்லாதது. ஆகையயால் கடையில் இருந்து வாங்கும் முன்பே முடிவு தேதியை (Expiry Date) பரிசோதித்து வாங்கவும்.

சரி, முடிவு தேதியை எப்படி சரிபார்ப்பது அல்லது கண்டு பிடிப்பது?

மேல் வளையத்தின் கீழே உள்ள மூன்று காலில் ஆங்கில எழுத்து A or B or C or D மற்றும் இரண்டு இலக்க எண்ணை காணலாம். (எ. கா. D06). அதன் விளக்கங்களை கிழே பார்க்கவும்.

ஆங்கில எழுத்து A or B or C or D என்பது காலாண்டுகலை குறிக்கும்

1. A என்பது முதல் காலாண்டு (மார்ச் மாதம் முடிய)
2. B என்பது இரண்டாம் காலாண்டு (ஜூன் மாதம் முடிய)
3. C என்பது மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் மாதம் முடிய)
4. D என்பது நான்காம் காலாண்டு (டிசம்பர் மாதம் முடிய)
5. கடைசி இரண்டு இலக்க எண் என்பது வருடத்தை குறிக்கும்.

எடுத்து காட்டாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்

முடிவு தேதி முடிந்த படம்


இங்கே D-06இல், D என்பது நான்காம் காலாண்டு (டிசம்பர் மாதம் முடிய) , 06 என்பது 2006 ஆம் வருடத்தை குறிக்கும். ஆகவே இது காலாவதியான சிலிண்டர். இந்த சிலிண்டரை திருப்பி கொடுத்துவிடவும் ஏனெனில் இது பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாதது.

சரியாக உள்ள படம்


இரண்டாவது எடுத்துகாட்டை பார்க்கவும். இதில் D-13 என்பது நான்காம் காலாண்டு (டிசம்பர் மாதம் முடிய) 2013 ஆம் வருடத்தை குறிக்கும்,எனவே இது காலாவதியாகாத சிலிண்டர். நீங்கள் பயன் படுத்தலாம்

நன்றி, வாழ்க வளமுடன்

நட்பு எப்படி பிரிகிறது ?

|


நட்பு எப்படி பிரிகிறது ?

இரண்டு நண்பர்களும் ஒருவருக்கு ஒருவர், மற்றவர் வேலையில் மும்மரமாக () தீவிரமாக இருப்பதாக நினைத்து கொள்வர்

அதனால் ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற நினைப்பில் இருவரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்

அப்படியே காலங்கள் சென்றுவிடும்

இருவருமே மற்றவர் பேசட்டுமே என்று நினைப்பார்கள்

அதன்பிறகு நான் ஏன் முதலில் பேசவேண்டும்? என இருவருமே இணைப்பார்கள்

இங்குதாங்க அன்பு கோபமாக மாறுகிறது


கடைசியில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளாமல் அவர்களது ஞாபகம் வலுக்குறைந்து விடுகின்றன


அவர்கள் ஒருவரை ஒருவர் மறந்துவிடுகிறார்கள்



ஆகையால் எல்லோரும் நட்பை மறக்காமல் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்


கடிதம்,மின்னஞ்சல், தொலைபேசி மூலமாக தொடர்பில் இருக்கலாமே!


உடனே உங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (15) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (7) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (54) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (13) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (14) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)
 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB