Welcome to Arivu's Collection

இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

திருக்குறள்

தேடல்

Dec
14,
2014

அந்த பத்து....

|


'பசி வந்தால், பத்தும் பறந்து போகும்...' என்பது பழமொழி. அந்த பத்து:
1) மானம்,
2) குலம்,
3) கல்வி,
4) ஈகை,
5) அறிவுடமை,
6) தானம்,
7) தவம்,
8) முயற்சி,
9) தாளாண்மை மற்றும்
10)காதல்

Nov
9,
2014

விவேக சிந்தாமணி

|


ஆபத்துக்கு உதவாத பிள்ளை

அரும்பசிக்கு உதவாத அன்னம்;

தாபத்தை போக்கா தண்ணீர்,

தரித்திரம் அறியா பெண்டீர்;

கோபத்தை அடக்கா வேந்தன்,

குருமொழி கொள்ளா   சீடன்;

பாவத்தை போக்கா தீர்த்தம்,

பயனில்லை ஏழும்தானே!

Oct
26,
2014

தினமும்....

|



தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள்.


பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்
 

பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்.

   
தினசரி பேப்பரை ஒரு வரி விடாமல் படியுங்கள். 

  
தினமும் நண்பர்களுடன், காலையில், மூன்று மணி நேரமும், மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள்.
 
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!
 

 
- இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால்,
 
 நீங்கள் வேலை வெட்டியில்லாதவர்; உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.
 

Oct
22,
2014

தீபாவளி வாழ்த்துக்கள்

|

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எமது தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்
அன்பு வாசகர்கள்

Click here to get more
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எமது தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அறிவுமதி
Provided by MasterGreetings.com

Oct
12,
2014

நாளை என்ன நடக்கப் போகிறது

|


ஒருமுறை ஒரு மனிதருக்கு, அவர் செய்யாத குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நாட்டின் அரசர் உத்தரவிட்டு விட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன், அவர் அரசனை நோக்கி, ‘அரசே! எனக்கு ஒரு வருடம் அவகாசம் கொடுத்தால், உங்கள் குதிரையைப் பறக்க வைப்பேன்என்று சொன்னார். இதைக் கேட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்த அரசர், கடைசியில், ‘சரி! ஆனால் அப்படி குதிரை பறக்காவிட்டால், உன் தலையை யானையின் காலுக்குக் கீழே வைத்து நசுக்கிவிடுவேன்என்று எச்சரித்து, அவனுக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்தனுப்பினார்.

அரசரின் குதிரையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரைப் பார்த்த அவர் மனைவி, ‘என்ன இப்படி செய்து விட்டீர்கள்? குதிரைக்கு எப்படி பறக்க கற்றுக் கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறந்து கேள்விப்பட்டதுண்டா?’ என்று சோகமாகக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், ‘எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் ஒருவேளை அரசர் இறந்துவிடலாம், அல்லது நானே இயற்கை மரணம் அடைந்துவிடலாம் அல்லது இந்தக் குதிரை இறந்துவிடலாம். இல்லை யென்றால், இந்தக் குதிரை பறக்கக் கூட கற்றுக் கொள்ளலாம், யாருக்குத் தெரியும்?’ என்றார்.

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்கத் தேவையில்லை. நாளை நடக்கப் போவதற்கு இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அவையே ஒரு தீர்மானமாக, இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை. இன்றைய சூழல்களை நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால்தான் அவர்களுக்கு துயரங்களும், மன அழுத்தமும் ஏற்படுகின்றன

Sep
14,
2014

உண்மையை அறிந்தால்

|


ஒரு மருத்துவமனை. டாக்டர்கள் கூடினர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில், தினம் காலை எட்டு மணிக்கு ஒரு நோயாளி இறக்கிறார். ஏன்?”

மருத்துவரீதியாக எந்த விளக்கமும் திருப்தி தரவில்லை. நிபுணர்களுக்கே இந்த விஷயம் சவாலாக இருந்தது.

அந்த நேரம் பேய், பிசாசு போன்ற ஏதோவொரு அமானுஷ்ய சக்தி உள்ளே வந்து உயிரைப் பறித்துப் போகிறதோ!என்றார் ஒரு டாக்டர்.
 
எதுவானாலும், அதைக் கண்டு பிடித்துவிடுவது என்று முடிவானது.
 
ஒரு குறிப்பிட்ட தினத்தில் டாக்டர்கள், தத்தம் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தபடி, அங்கே ஒளிந்திருந்து கவனித்தனர்.
 
சரியாக எட்டு மணிக்குக் கதவு திறந்தது. உள்ளே நுழைந்தாள், துப்புரவு செய்யும் பெண்மணி, உயிர்காக்கும் இயந்திரத்தின் பிளக்கைப் பிடுங்கினாள். அங்கே வேக்குவம் கிளீனரின் பிளக்கைச் செருகி அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

இப்படிதான் நாமும் இப்படி பல நிகழ்வுகளுக்கு நாமே ஒரு முடிவுக்கு வந்து மனம் சோர்ந்து விடுகிறோம் .உண்மையை அறிந்தால், விடா முயற்சி செய்வோம்

Aug
10,
2014

கடவுள் நகைச்சுவை-2

|

 
இது நெட்டில் படித்தது
ஒருவன் இறைவனை வேண்டி தவமிருந்தான்..
 
இறைவன் தோன்றி " என்ன வரம் வேண்டும் பக்தா ? " என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்..
ஆண்டவா.. அமெரிக்காவில் என் மகன் இருக்கிறான். அவனைப் பார்க்க வான் வழிப் பாலம் ஒன்று அமைத்துக் கொடு.. நான் விரும்பிய சமயத்தில் காரில் சென்று திரும்ப வசதியாக இருக்கும்..என்றான்.
 
இறைவனோ.." பக்தா.. இது என்னால் முடியும் என்றாலும், எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் தெரியுமா..? பெரிய தூண்கள் அமைத்து அதன் மேல் பாலம் உருவாக்க வேண்டும்..இது உன் ஒருவன் சம்பந்தப்பட்ட விஷயம்..
உனக்காக மட்டும் இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா..?
 
நீ கேட்கும் வரம் உனக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்க வேண்டும்.. உனக்கு புகழையும் எனக்கு மரியாதையும் தரும் படியாக ஒரு வரத்தைக் கேள்.. நன்றாக யோசி.. நாளை வருகிறேன்...
மறுநாள்.... நம்ம ஆள் கேட்டான்.. " இறைவா..எல்லாம் அறிந்தவனே..! நான் பெண்கள் மனதை புரிந்து கொள்ளும் வரம் தா..!"
 
அதிர்ச்சியடைந்த இறைவன் சொன்னார்.." உனக்கு பாலம் மட்டும் போதுமா..இல்லே முழுக்க சோடியம் வேப்பர் விளக்கும் வேணுமா..???

Jul
13,
2014

நாங்கள் இப்போது எங்கே இருக்கிறோம்?

|

 
அமெரிக்காவில், சியாட்டில் நகரில் பனிப்புயலினூடே ஒரு ஹெலிகாப்டர் சிக்கித் தடுமாறியது. அதன் தகவல் தொடர்பு சாதனங்களும் பழுதுபட்டு விட்டன. என்ன செய்வதென்றறியாமல் பைலட்டும், துணை பைலட்டும் திணறும் போது, ஒரு உயரமான கட்டிடத்தைக் கண்டனர். அதில் இருந்த சில அதிகாரிகளும் ஹெலி அலைக்கழிக்கப் படுவதை உணர்ந்து அதற்கு உதவ முன்வந்தனர்..

மிகுந்த சிரமத்துக்கிடையே, ஹெலியின் இரைச்சலையும் மீறி பைலட் அவர்களிடம் கேட்டார்..

"
நாங்கள் எங்கே இப்போது இருக்கிறோம்
..??"

அந்த கட்டிடத்தில் இருந்த அதிகாரிகளும் மிகுந்த சிரமத்தின் பேரில் பதிலளித்தனர்
....

"
உங்கள் ஹெலிகாப்டருக்குள் இருக்கிறீர்கள்
..!!!"

துணை பைலட் கோபத்தின் உச்சிக்கே போக, பைலட் அவரை சமாதானப் படுத்திவிட்டு சொன்னார்..." இனி பயமில்லை..இது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம்.. இதற்கு பக்கத்தில் ஒரு இறங்குதளம் உள்ளது.. நாம் பிழைத்தோம்."


சற்று நேரத்தில் ஹெலி பத்திரமாக தரை இறங்கியது..
 
துணை பைலட் கேட்டார்," எப்படி நீங்கள் அது மைக்ரோசாப்ட் என்று கண்டுபிடித்தீர்கள் ?


பைலட் சொன்னார்," பதில் சொன்னாங்க கேட்டீல்லே.. கரெக்டா சொல்வானுங்க.. ஆனா யாருக்கும் பிரயோசனம் இருக்காது..!!!".

Jun
1,
2014

பரிசளி

|


பகைவனுக்கு - மன்னிப்பைப் பரிசளி

நண்பனுக்கு - உள்ளத்தைப் பரிசளி

தாய்க்கு - சான்றோன் எனப் பிறர் கூறும் புகழைப் பரிசளி

தந்தைக்கு - மரியாதையைப் பரிசளி

மனைவிக்கு - சகிப்புத்தன்மையைப் பரிசளி

குழந்தைக்கு- நல்ல நடத்தையைப் பரிசளி

மற்றவர்களுக்கு - தாராள குணத்தைப் பரிசளி

நமக்கு - தன்னம்பிக்கையைப் பரிசளி

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB